Friday, 11 November 2016

7. நோவா முதல் யாக்கோபு வரை மரறைநூலில் உள்ள தலைமுறை பற்றிய வசனங்கள்

தொடக்க நூல் - 5:32 / 11:10-26 / 11:32 / 21:3 / 25:26 / 29:35

5:32
     நோவாவிற்கு 500 வயதான பொழுது அவருக்கு சேம், காம், எப்பத்து ஆகியோர் பிறந்தனர்.

11:10-26

10. சேமின் தலைமுறைகள் இவையே: வெள்ளப் பெருக்கிற்கு 2 ஆண்டுகளுக்குப் பின் சேம் 100 வயதாக இருந்தபோது அவனுக்கு அர்பகசாது பிறந்தான்.

11. அர்பகசாது பிறந்தபின் சேம் 500 ஆண்டுகள் வாழ்ந்தான். அபொழுது சேமுக்கு புதல்வரும் புதல்வியரும் பிறந்தனர்.

12. அர்பகசாது 35 வயதாக இருந்தபொழுது அவனுக்கு செலாகு பிறந்தான்.

13. செலாகு பிறந்தபின் அர்பகசாது 403 ஆண்டுகள் வாழ்ந்தான். அப்பொழுது அர்பகசாதுக்குப் புதல்வரும் புதல்வியரும் பிறந்தனர்.

14. செலாகு 30 வயதாக இருந்தபொழுது அவனுக்கு ஏபேர் பிறந்தான்.

15. ஏபேர் பிறந்தபின் செலாகு 403 ஆண்டுகள் வாழ்ந்தான். அப்பொழுது செலாகிற்குப் புதல்வரும் புதல்வியரும் பிறந்தனர்.

16. ஏபேர் 34 வயதாக இருந்தபொழுது அவனுக்கு பெலேகு பிறந்தான்.

17. பெலேகு பிறந்தபின் ஏபேர் 430ஆண்டுகள் வாழ்ந்தான். அப்பொழுது ஏபேருக்குப் புதல்வரும் புதல்வியரும் பிறந்தனர்.

18. பெலேகு 30 வயதாக இருந்தபொழுது அவனுக்கு இரயு பிறந்தான்.

19. இரயு பிறந்தபின் பெலேகு 209 அண்டுகள் வாழ்ந்தான். அப்பொழுது பெலேகிற்குப் புதல்வரும் புதல்வியரும் பிறந்தனர்.

20. இரயு 32 வயதாக இருந்தபொழுது அவனுக்கு செரூகு பிறந்தான்.

21. செரூகு பிறந்தபின் இரயு 207 ஆண்டுகள் வாழ்ந்தான். அப்பொழுது இரயுவுக்குப் புதல்வரும் புதல்வியரும் பிறந்தனர்.

22. செரூகு 30 வயதாக இருந்தபொழுது அவனுக்கு நாகோர் பிறந்தான்.

23. நாகோர் பிறந்தபின் செரூகு 200 ஆண்டுகள் வாழ்ந்தான். அப்பொழுது செரூகுக்குப் புதல்வரும் புதல்வியரும் பிறந்தனர்.

24. நாகோர் 29 வயதாக இருந்தபொழுது அவனுக்கு தெராகு பிறந்தான்.

25. தெராகு பிறந்தபின் நாகோர் 119 ஆண்டுகள் வாழ்ந்தான். அப்பொழுது தெராகுக்குப் புதல்வரும் புதல்வியரும் பிறந்தனர்.

26. தெராகு 70 வயதாக இருந்தபொழுது அபிராம், நாகோர், ஆரான் ஆகியோர் பிறந்தனர்.

11:32
     தெராகு 205 வயதாக இருந்தபொழுது காரானில் இறந்தார்.

21:3
     ஆபிரகாம் தமக்கு பிறந்த, சாரா தமக்கு பெற்றுக்கொடுத்த, மகனுக்கு "ஈசாக்கு" என்று பெயரிட்டார்.

25:26
     இரண்டாவது பிள்ளை தன் சகோதரன் ஏசாவின் குதிங்காலை கையால் பற்றிக் கொண்டு வெளிவந்தான். எனவே அவனுக்கு "யாக்கோபு" என்று பெயரிடப்பட்டது. அவர்கள் பிறந்த போது ஈசாக்கிற்கு வயது 60.

29:35
     அவர் மீண்டும் கருதாங்கி ஒரு மகனைப் பெற்றெடுத்தார். 'இப்போது ஆண்டவரை நான் மாட்சி படுத்துவேன்' என்று சொல்லி அவனுக்கு "யூதா" என்று பெயரிட்டார்.



No comments:

Post a Comment